ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் தலிவால். அமெரிக்க காவல்துறை வரலாற்றில், பணியில் இருக்கும் போது தலைப்பாகை, தாடியுடன் சேவையாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் சீக்கியர் இவர்தான். கடந்த 2019ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்த பணியில் இருந்தபோது, காரில் வந்த ஒருவரை நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கவுரவிக்கும் வகையில் ஹூஸ்டனில் உள்ள 315, அடில்ஸ் ஹோவெல் ரோடு தபால் அலுவலகத்துக்கு இவருடைய பெயரை சூட்டும் தீர்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது.