சென்னை: நடிகை சஞ்சனா கல்ராணி மீது கேப் டிரைவர் போலீசில் புகார் அளித்தார். தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி. கன்னட நடிகையான இவர், போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். பல மாதம் சிறையில் இருந்த இவர், சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இந்திரா நகரிலிருந்து ஆர்ஆர் நகருக்கு செல்ல கேப் ஒன்றை புக் செய்தார். கார் சென்றுகொண்டிருந்தபோது, ஏசி இல்லை என்று டிரைவரிடம் சஞ்சனா கூறியுள்ளார்.