டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை மாற்றத்துடன் தமிழக அரசு அமல்படுத்தலாம் என்று முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார். நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கிவிடாமலிருக்க தேசிய கல்விக் கொள்கை தேவை. மேலும் தமிழகம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.