தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). எம்காம் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த திருமால் மூலம் பரமன்குறிச்சியை சேர்ந்த கணேசன் (53) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர், ரமேசிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிடிஓ அலுவலகங்களில் அரசு பணி வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷ், கடந்த 15.1.2020ல் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட கணேசன், பிடிஓ அலுவலகத்தில் கிளார்க் பணிக்கான பணி ஆணையை அரசிடம் இருந்து பெற்றது போல் வழங்கியுள்ளார்.