செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் முன்னாள் தலைவர் சல்குரு மகள் எஸ்.மோகனபிரியா, 5வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கும், பாலூர் 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அதிமுக சார்பில் கலைவாணி ஆகியோர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது பாலூர், வில்லியம்பாக்கம், திம்மாவரம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பிலும், நடந்து சென்று வீடு வீடாக மக்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்தனர். அப்போது பேசிய எஸ்.மோகனபிரியா ‘‘என்னை வெற்றி பெற செய்தால், இப்பகுதியில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் புதிய சாலைகளாக அமைத்து தருவேன்.