கோமா: காங்கோவில் எரிமலை சீற்றத்தால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் குழந்தைகளுக்கு நடனம் மூலமாக உற்சாகம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவின் மிக அபாயகரமான நிராகாங்கோ எரிமலை அண்மையில் வெடித்து நெருப்பை கக்கியதில் 30 பேர் பலியாகினர். வீடுகளை இழந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் கோமாநகர முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த 3 முதல் 10 வரை வரையிலான குழந்தைகளுக்கு இணுகா நடன பயிற்சி சார்பில் நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.