திருத்தணி: கடந்த 10 ஆண்டாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராடி வந்த 45 இருளர் குடும்பத்தினருக்கு நேற்று அமைச்சர் ஆவடி நாசர் பட்டாக்களை வழங்கினார். திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரை சேர்ந்த இருளர் காலனி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று பகத்சிங் நகரில் வசிக்கும் 45 இருளர் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா வரவேற்றார். இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று 45 இருளர் குடும்பத்தினருக்கு பட்டாக்கள் வழங்கினார்.