காஞ்சிபுரம்: கலெக்டர்கள் காஞ்சிபுரம் ஆர்த்தி, செங்கல்பட்டு ராகுல்நாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய வட்டங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிமீ தூரத்துக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும். அதன்படி, வரும் 4, 5, 6 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12ம் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிமீ தூரத்துக்குள் வரும் 7, 8, 9 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.