திருவில்லிபுத்தூர்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த செப்.24ம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு சென்றார். அவருக்கு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.