சண்டிகர் : காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் அடுத்த 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் அடுத்தடுத்து உட்கட்சி பூசல் அரங்கேறி வருகின்றன.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேட்பன் அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவியை கடந்த 18ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.