கடலூர்: கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முந்தைய நாட்களில் ஆலயங்களில் அதிகளவில் பக்தர்கள் கூடுவது தொடர்கதையாகி வருகிறது. கடலூர் திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விஷேச நாட்கள், வெள்ளி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.