விருதுநகர்: சூலக்கரை காவல் நிலைய தலைமைக்காவலர் பானுப்பிரியா மரணம் பற்றி அறிக்கை தர விருதுநகர் எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பானுப்பிரியாவின் தந்தை சந்திரசேகர் தொடர்ந்த வழக்கை அக்டோபர் 13க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. பானுப்பிரியாவை அவரது கணவர் விக்னேஷ் அடித்து கொலை செய்ததாக பானுப்பிரியாவின் தந்தை சந்திரசேகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.