தோகைமலை : தோகைமலை அருகே வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதோியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் கால்நடை பராமாிப்பு துறையும் இணைந்து வௌ்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வேலாயுதபண்ணைகளம் மற்றும் புழுதோி ஆகிய கிராமங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் முரளிதரன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கான நோய் மற்றும் பராமாிப்பு குறித்து விளக்கினார். முகாமில் கால்நடைகளுக்கான நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.