நாகை: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதை தடுக்கவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை கண்காணித்து தடுக்கவும் இந்திய கடலோர பாதுகாப்பு படையால் ஆபரேசன் அவ்ரோத் என்ற பெயரில் நேற்றுமுன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, இந்திய கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழக மீனவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நாகூர்பட்டினச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்தது.