வேதாரண்யம்,: வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிகிடங்கில் தோட்டக்கலைத்துறை பண்ணைக்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிகிடங்கு நால்ரோடு அருகே வண்டுவாஞ்சேரியில் அரசு தோட்டக்கலை துறை பண்ணை 15 ஏக்கரில் அமைந்துள்ளது. பல்வேறு கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு தாலுகா முழுவதிலும் இருந்து நாள்தோறும் விவசாயிகள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.