சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும், தனக்கு எதிராக 50 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதாலும், இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கடந்த வாரம் பதவி விலகினார். சித்துவின் ஆதரவாளரும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவருமான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வரானார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓபி சோனி துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.இதற்கிடையே, டெல்லியில் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் சரண்ஜித் சிங் நேற்று, பஞ்சாப் திரும்பினார்.