அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குறைவான நாட்களே பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் வழங்க உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்றும் அதுவரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.