திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிளங்கை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், மாவட்டத்தில் முதன் முறையாக நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். பின்னர் நெல் கொள்முதல் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு பனை விதைகளையும், மானிய விலையில் விவசாய இடுபொருட்களையும் வழங்கினார். பின்னர் நெல்மணிகளின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திற்கு குறைவாக இருப்பதை ஈரப்பதம் அளவிடும் கருவி மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். பிறகு நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குப்புவேல் என்ற விவசாயிடமிருந்து 1150 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.