வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் குவாட் உச்சி மாநாடு, ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சென்று சந்தித்து பேசினார்.