புதுடெல்லி: இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை, ‘இந்திய போட்டி ஆணையம்’ கண்காணித்து வருகிறது. இதன் விதிமுறைகளை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது. அதில், `கூகுள் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு வர்த்தக விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டது உறுதியாகி இருக்கிறது,’ என தெரிய வந்தது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து அனுப்பிய ரகசிய அறிக்கை, பொதுவெளியில் கசிந்து இருப்பதாக கூகுள் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, போட்டி ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.