திருவள்ளூர்: மாவட்டத்திலுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக்கம் செய்யவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மாவட்ட ஏற்றுமதி விருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள், பொறியியல் பொருட்கள், தானியங்கி வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், ரசாயனப் பொருட்கள், நெகிழி பொருட்கள், பருப்பு, மற்றும் பருப்பு சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வசதியாக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் 2022 ல் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மத்திய வர்த்தக அமைச்சகம் வர்த்தக வாரமாக கொண்டாடப்படுகின்றன.