மதுராந்தகம்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்படாமல் இருக்க மாபெரும் மழைநீர் வடிகால்வாய் தூய்மை பணி முகாம்வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து நடத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கிடந்த கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துவங்கியது. முதலில் பார்த்தசாரதி தெருவில், மழைநீர் கால்வாயில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி பணியை தொடங்கினர்.