காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும், கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து, கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் காஸ் சிலிண்டர் குடோனில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.