புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊராட்சி தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இவற்றிற்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி முதற்கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி காரைக்கால், வாகே, ஏகாம்தானிடங்களில் நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 7 மையங்களில் 31ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: