நியூயார்க்: இங்கிலாந்து அறிவித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளில் இந்தியர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரிடம் இந்தியா வேதனை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தனிமைப்படுத்துதல் இன்றி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளது.