செஞ்சி: செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது பொண்ணங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2500 பேரும், ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 7,500 பேரும் உள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதனை ஒரு தரப்பினர் பயன்படுத்தி ரூ.13 லட்சத்துக்கு முனுசாமி என்பவரின் மனைவி மங்கையை ஒருதலைபட்சமாக தேர்வு செய்தனர். இதற்கு பொண்ணங்குப்பம் பலரும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.