அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் இவருக்கு, கடந்தாண்டு, முகநூல் மூலமாக கல்லூரியில் உடன் படித்த புழல், இந்திரா நகரை சேர்ந்த மதன்குமாருடன் (32) பழக்கம் ஏற்பட்டது. அப்போது லட்சுமிபிரியா, தனது கணவரை விவாகரத்து செய்ய உதவும்படி கேட்டுள்ளார். அதற்கு மதன்குமார், நான் புழல் சிறையில் காவலராக உள்ளேன். எனக்கு தெரிந்த பிரபல வழக்கறிஞர் மூலம் விவகாரத்து செய்ய ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார்.