ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறையிடம் ஒன்றிய அரசு அனுமதி கேட்டபோது தர முடியாது என மறுக்கப்பட்டது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.