தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது துவக்கப்பட்ட இப்பணிகள், சப்-கான்ட்ராக்ட் அடிப்படையில் பல இடங்களில் நடக்கிறது. இந்த பணிகள் தரமற்றதாக உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் தற்போது கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.