மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே 80 ஆண்டுகளாக வசிக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து| பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை ஊர்மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி இளம்பிலான்தோட்டம் பகுதியில் குளக்குடிகுளம் அமைந்துள்ளது. இந்ந குளத்தில் கரையோரத்தில் 80ஆண்டுகளுக்கும் மேலாக வயதானோர்கள் பெண்கள் குழந்தைகளுடன் வசித்துவரும் 8 குடியிருப்புகள் மற்றும் தமிழக அரசு அங்கன்வாடிமைய கட்டிடம் ஆகியவை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பாகோடு பேரூராட்சி நிர்வாகம் அந்த வீடுகளை இடித்து அகற்ற பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனர்.