பணியாளர்களுக்கு இருசக்கர வாகனம்

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மூலம் காசநோயால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து முதுநிலை சிசிக்சை மேற்பார்வையாளர்கள், ஆய்வக மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு 7 இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதில் காசநோய் துறை துணை இயக்குநர் லட்சுமி முரளி, குடும்பநலம் துறை துணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: