தேசிய குடற்புழு நீக்க வாரம்: கலெக்டர் துவக்கினார்

செங்கல்பட்டு: தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பர் 13 முதல் 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் தேசிய குடற்புழு நீக்க வாரம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர்  ராகுல்நாத் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் கொடுத்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் பரணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.ரோஸ் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: