டெல்லி: இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களும், லடாக், லட்சத்தீவுகள் தத்ரா நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளன. அதாவது அங்கெல்லாம் 18 வயது நிரம்பிய அனைவருமே குறைந்தது ஒரு தவணை கொரோனா தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது முதலே தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு முதலில் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வந்தாலும், கொரோனா கொல்லுயிரியை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என விஞ்ஞானிகள் தெரிவித்து வருவதால் அதனை தற்போது ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.