வத்திராயிருப்பு: தினகரன் செய்தி எதிரொலியாக, வத்திராயிருப்பு பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்திலிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. வத்திராயிருப்பு பேரூராட்சியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வளாகத்தைச் சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் கட்டிய சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. ஆனாலும், சுற்றுச்சுவரை கட்டாமல் பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் தொட்டி இருந்தது.