காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் இணையவழியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அலுவலர் விஜயராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, காஞ்சிமா முனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்து பேசினார்.