புதுடெல்லி: ‘லோக்பால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடோ, மறுசீராய்வோ செய்யும்படி கேட்கவோ முடியாது,’ என்று அந்த அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட அமைப்பு சுய அதிகாரம் கொண்டதாகும். இந்த அமைப்புகள் பிரதமரையும் விசாரணை நடத்தும் அளவுக்கு அதிகாரமும், சுதந்திரமும் பெற்றுள்ளது. இந்நிலையில், ஊழல் தடுப்பு புகாரில் புகார்தாரர் ஒருவர், லோக்பால் அமைப்பின் உத்தரவை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மறுசீராய்வு அல்லது பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.