டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.டோனி சம்மததித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில், ``நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். டோனி செயல்படுவார். பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார்.