திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் கருவேலம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மொச்சிகுளம் செல்லும் பாதையில் விவசாய நிலத்தின் அருகில் உள்ள பாறையில் ஆண், பெண் உருவமுடைய புடைப்பு சிறப்பமும், அதன் அருகே நான்கு எழுத்துக்களும் இருந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன், வரலாற்று பேராசிரியர்கள் லெட்சுமணமூர்த்தி, அஸ்வத்தாமன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் மற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்துள்ளது. இதில் இந்த பாறையில் உள்ளது கிரந்த எழுத்துக்கள் எனவும், இவை சுமார் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் இந்த எழுத்து 2 அடி அகலம், 4 அடி நீளமும் கொண்ட 4 வரிகளில் கிரந்த எழுத்துகளுடன் காணப்பட்டுள்ளது. இதன் அருகில் 2 அகலம் 3 அடி உயரம் கொண்ட புடைப்பு சிற்பமும் காணப்பட்டுள்ளது.