மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவனி அமாவாசையையொட்டி நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அம்மன் சிறப்பு காட்சியளித்தார். கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் யாரும் இன்றி எளிய முறையில் கோயில் பூசாரிகள் அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி வழிபட்டனர்.