போடி : போடி அருகே, தேனிக்கு செல்லும் சாலையில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பாக சாலையோரம் பெரும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாதாளச் சாக்கடை கழிவுநீர் குழாயை போடி நகராட்சி பாதாளசாக்கடை கழிவுநீர் குழாயுடன் இணைப்பதற்காக, சாலைக்காளியம்மன் கோயில் அருகே பெரும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். ஆனால், பள்ளம் தோண்டி 21 நாட்களை கடந்த நிலையில் பணி இன்னும் முடிக்கப்பெறாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.