ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், பாதிப்பை குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி இரண்டு செலுத்தியவர்கள், அதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே மது வகைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு டாஸ்மாக் மேலாளர் மூலம் அனைத்து மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.