சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மணப்பாறை தொகுதி உறுப்பினர் ப.அப்துல் சமது (மமக) கேள்விக்கு, பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின்படி தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகள், குழுமங்கள், வாரியங்கள், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.