வேலூர்: அதிமுக ஆட்சியில் ஊராட்சி செயலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் கொடுத்து, கொரோனா தடுப்பு பணிக்கான 2ம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியில் பலர் சேர்ந்தது தெரியவந்தது. இதேபோல் வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு கடந்தாண்டு அவசரமாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர்.