திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கணவன் இறந்ததால் மனம் உடைந்த இளம் பெண் 2 குழந்தைகளுடன் தீ குளித்து தற்கொலை செய்தது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் அனூப் (33). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி அஞ்சு (29). இந்த தம்பதியின் மகள் ஆதிரா (7), மகன் அனூஷ் (3). இதற்கிடையே கணவர் அனூப் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் அஞ்சு மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அஞ்சு வீட்டில் இருந்தார். திடீரென தனது உடல், குழந்தைகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.