2 குழந்தைகள் எரித்து கொலை: தாய் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கணவன் இறந்ததால் மனம் உடைந்த இளம் பெண் 2 குழந்தைகளுடன் தீ குளித்து தற்கொலை செய்தது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் அனூப் (33). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி அஞ்சு (29). இந்த தம்பதியின் மகள் ஆதிரா (7), மகன் அனூஷ் (3). இதற்கிடையே கணவர் அனூப் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் அஞ்சு மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அஞ்சு வீட்டில் இருந்தார். திடீரென தனது உடல், குழந்தைகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் 3 பேரும் கருகினர். பின்னர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அப்போது 3 பேரும் தீயில் கருகி இறந்து கிடந்தனர். இது குறித்து அவர்கள் அங்கமாலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கணவர் இறந்த வேதனையில் மகன், மகளை கொன்று அஞ்சு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: