காஞ்சிபுரம்: காஞ்சி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக அவைத் தலைவரின் 4ம் ஆண்டு நினைவுநாளில், எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக இருந்து மறைந்த பொன்மொழியின் 4ம் ஆண்டு நினைவு நாள், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பொன்மொழியின் படத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொன்மொழியின் மகனும், திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான வக்கீல் எழிலரசன், தனது குடும்பத்தினருடன் தந்தையின் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.