காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட முன்னாள் திமுக அவைத் தலைவர் 4ம் ஆண்டு நினைவுநாள்

காஞ்சிபுரம்: காஞ்சி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக அவைத் தலைவரின் 4ம் ஆண்டு நினைவுநாளில், எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக இருந்து மறைந்த பொன்மொழியின் 4ம் ஆண்டு நினைவு நாள், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பொன்மொழியின் படத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொன்மொழியின் மகனும், திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான வக்கீல் எழிலரசன், தனது குடும்பத்தினருடன் தந்தையின் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் எம்பி செல்வம், மாவட்ட அவைத் தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், எஸ்கேபி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி..எம்.குமார், டி.குமார், க.குமணன், பூபாலன், நெசவாளர் அணி செயலாளர் அன்பழகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், தொண்டரணி பொதுச்செயலாளர் சுகுமாரன், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிககள் சுகுமார், குமரேசன், மாமல்லன், முத்துசெல்வம், சாட்சி சண்முகசுந்தரம், தசரதன், மாரிமுத்து, எம்.எஸ்.சுகுமார், சேகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அபுசாலி, செல்வி, தமிழ்ச்செல்வன், நாத்திகம் நாகராசன், யுவராஜ், ராம்பிராசத், துரைமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: