டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வென்றார். பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வீரர் கிரீவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஷரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகினறன.
மாரியப்பன் தங்கவேலு நிலைத்தன்மை மற்றும் சிறப்பிற்கு ஒத்ததாகும். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தனது ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் ஷரத்குமார் அடங்காதவர் புன்னகையை கொண்டு வந்தார். அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் என மோடி புகழாரம் செய்துள்ளார்.