சேலம்: சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் மீது ஆசிட் வீசிய கணவர் யேசுதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் கூறியுள்ளார். விவாகரத்து கேட்டு, தனது தாயுடன் காவல் நிலையம் சென்றுவிட்டு திரும்பும் போது பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. நேற்று சம்பவம் நடைபெற்ற நிலையில், இன்று காலை பெண்ணின் கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் தாய்க்கு சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.