பிதோராகர்க்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். ஏராளாமானோர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிதோராகர்க் மாவட்டத்தில் உள்ள ஜூம்மா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அப்போது வீட்டில் இருந்தவர்களும் அடித்து செல்லப்பட்டனர். காணாமல் போன அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டது. இதில் 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.