புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, ‘மன் கீ பாத்’ எனப்படும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஆகஸ்ட் மாத கடைசி ஞாயிறான நேற்று, அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: இளம் தலைமுறையின் மனநிலை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. புதிய பாதைகள் மற்றும் புதிய ஆர்வங்கள் மூலமாக இப்போது புதிய இலக்குகளில் ஆர்வமாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கி, நம்மால் முடிந்தவரை இதற்கான வேகத்தை அதிகரிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அனைவரின் முயற்சி என்பதை யதார்த்தமாக மாற்றுவோம்.