செந்துறை: செந்துறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புறவழிச்சாலை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து செந்துறை திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி முகாம் அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் இளங்கோவன், ராஜேந்திரன், இளஞ்செழியன், சசிகுமார், சிவ.பாஸ்கர், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நடைபெற்று வரும் சட்டத்தொடரில் செந்துறைக்கு தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செந்துறை ஒன்றியத்திற்கு பாலிடெக்னிக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை, நீதி மன்றக்கட்டிடம் மற்றும் புறவழிசுற்றுச்சாலை அமைத்திட ஆனை பிறப்பித்த தமிழக முதல்வர்க்கும் பரிந்துரை செய்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செந்துறைக்கு புறவழிச்சாலை, பாலிடெக்னிக் கல்லூரி முந்திரி தொழிற்சாலை அறிவித்த முதல்வருக்கு நன்றி: ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- செந்துரா
- பாலிடெக்னிக் கல்லூரி முந்திரி தொழிற்சாலை
- அறிவிப்பின் முதல்வர்
- தீர்மானம்
- யூனியன் ராஜதந்திர நிர்வாகி